-நீதிபதி மூ..புகழேந்தி-
என்ன மாயமோ?
ஏதும் புரியவில்லை.
இதயம் வெடித்துச் சிதறுதடா! – மனிதா,
இதென்ன வென்று தவிக்குதடா! – அந்த
விண்வழிச் சென்ற விமானம்
என்ன ஆனதோ? விந்தையடா!
ரைட் சகோதரர்கள்
இதையா நினைத்தனர்?
நினைத்து இருந்தால் மாட்டாரே! - இதனைக்
கண்டு பிடித்திருக்க மாட்டாரே! - இந்தக்
கவலைகள் நமையண்டச் செய்யாரே!
துன்பம் நெஞ்சை ஒட்டாதே!
எல்லாம் உயிர்களும்
மனித உயிர்களே!
என்ன ஆனதோ அவையெலாம்? - அடடா!
உறவின ரெல்லாம் நொந்தனரே! – அந்த
உறவுகள் மீண்டும் வந்திடுமோ?
உலகினர் கவலைதாம் மாய்ந்திடுமோ?
கடலில் விழுந்ததோ?
மலையில் இடித்ததோ?
மாயத்தில் மாயமாய்த் தோணுதடா! – நம்
மனமெலாம் மயங்கிப் போகுதடா! – அந்த
இறைவனைக் காணநான் புறப்பட்டேன்
இருப்பிடம் சொலும்வரை விடமாட்டேன்!
(சமீபத்தில் காணாமல் போன மலேசிய விமானம் குறித்து)
படத்துக்கு நன்றி: http://www.themalaymailonline.com
என்ன மாயமோ?
ஏதும் புரியவில்லை.
இதயம் வெடித்துச் சிதறுதடா! – மனிதா,
இதென்ன வென்று தவிக்குதடா! – அந்த
விண்வழிச் சென்ற விமானம்
என்ன ஆனதோ? விந்தையடா!
ரைட் சகோதரர்கள்
இதையா நினைத்தனர்?
நினைத்து இருந்தால் மாட்டாரே! - இதனைக்
கண்டு பிடித்திருக்க மாட்டாரே! - இந்தக்
கவலைகள் நமையண்டச் செய்யாரே!
துன்பம் நெஞ்சை ஒட்டாதே!
எல்லாம் உயிர்களும்
மனித உயிர்களே!
என்ன ஆனதோ அவையெலாம்? - அடடா!
உறவின ரெல்லாம் நொந்தனரே! – அந்த
உறவுகள் மீண்டும் வந்திடுமோ?
உலகினர் கவலைதாம் மாய்ந்திடுமோ?
கடலில் விழுந்ததோ?
மலையில் இடித்ததோ?
மாயத்தில் மாயமாய்த் தோணுதடா! – நம்
மனமெலாம் மயங்கிப் போகுதடா! – அந்த
இறைவனைக் காணநான் புறப்பட்டேன்
இருப்பிடம் சொலும்வரை விடமாட்டேன்!
(சமீபத்தில் காணாமல் போன மலேசிய விமானம் குறித்து)
படத்துக்கு நன்றி: http://www.themalaymailonline.com
அருமை ஐயா மிகச்சரியான வரிகள் இரசித்தேன்
ReplyDelete- கில்லர்ஜி